Posted in

முற்றியது போர்- “தியாகத்தைப் பேச உனக்குத் தகுதியில்லை!” – டிரம்பை வெளுத்து வாங்கிய கீர் ஸ்டார்மர்

“தியாகத்தைப் பேச உனக்குத் தகுதியில்லை!” – டிரம்பை வெளுத்து வாங்கிய கீர் ஸ்டார்மர்: பிரிட்டன் – அமெரிக்கா இடையே ‘ஈகோ’ யுத்தம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆப்கானிஸ்தான் போரில் உயிரிழந்த வீரர்களைக் கேலி செய்யும் வகையில் பேசியிருப்பது, இப்போது அட்லாண்டிக் பெருங்கடலின் இருபுறமும் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. NATO படை வீரர்கள் யாரும் நிஜமான போர்க்களத்தில் (Front lines) நிற்கவில்லை, அவர்கள் பாதுகாப்பான தூரத்தில்தான் வேடிக்கை பார்த்தார்கள்” என டிரம்ப் கூறிய கருத்துக்கு, பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது வெறும் தவறு அல்ல, “மிகவும் அருவருப்பானது மற்றும் தியாகத்தை இழிவுபடுத்தும் செயல்” என்று ஸ்டார்மர் ஆவேசமாகச் சாடியுள்ளார்.

இந்த விவகாரத்தில் டிரம்ப் உடனடியாகப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பிரிட்டன் அரசு வலியுறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் மண்ணில் அமெரிக்காவுடன் தோளோடு தோள் நின்று போரிட்ட 457 பிரித்தானிய வீரர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர். இதனை முற்றிலும் மறைத்துவிட்டு, ஏதோ அமெரிக்கா மட்டுமே போரிட்டது போல டிரம்ப் பேசுவது, மகன்களை இழந்த தாய்மார்களுக்கும், படுகாயமடைந்த வீரர்களுக்கும் இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகம் என ஸ்டார்மர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கிடையில், இந்த மோதல் முற்றி வருவதால், டிரம்ப் தனது நாட்டுப் படைகளை NATO அமைப்பில் இருந்து திரும்பப் பெறக்கூடும் (Withdrawal) என்ற அச்சமும் ஐரோப்பிய நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.

ஏற்கனவே ‘கிரீன்லாந்து‘ (Greenland) தீவை அமெரிக்கா விலைக்கு வாங்குவது தொடர்பாக, பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு டிரம்ப் கடும் மிரட்டல் விடுத்து வருகிறார். “கிரீன்லாந்தை விற்காவிட்டால் உங்கள் மீது கடுமையான வரிகள் (Tariffs) விதிக்கப்படும்” என்று அவர் மிரட்டி வரும் நிலையில், இந்தத் தியாகிகளை இழிவுபடுத்தும் பேச்சு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல மாறியுள்ளது. 2026-ன் தொடக்கத்திலேயே உலக நாடுகளுடனான உறவை டிரம்ப் ‘கையாளுவதை’ப் பார்த்தால், NATO அமைப்பின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது என அரசியல் விமர்சகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பிரிட்டனின் எதிர்க்கட்சித் தலைவி கெமி பேடனாக் கூட டிரம்பின் பேச்சை “முட்டாள்தனமானது” என விமர்சித்துள்ளார். “இது கருத்து அல்ல, வடிகட்டிய பொய்; வீரர்களின் ரத்தத்தைச் சிறுமைப்படுத்துவதை ஏற்க முடியாது” என அவர் கூறியுள்ளார். ஒரு பக்கம் ரஷ்யா – உக்ரைன் போர் மிரட்டல் விடுத்து வரும் நிலையில், தனது நட்பு நாடுகளை இப்படித் தூற்றி வரும் டிரம்பின் செயல், புடினுக்குத் தான் சாதகமாக முடியும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். “விசில்” சின்னம் பெற்று அரசியலில் குதித்துள்ள நம்ம ஊர் தளபதி போல, இங்கிலாந்திலும் இப்போது ஊழலுக்கு எதிராக அல்ல, சுயகௌரவத்திற்காக ஒரு ‘Whistleblower’ யுத்தம் தொடங்கியுள்ளது!

For the past two decades, Mr. Kannan has served as the Editor of Athirvu News. A veteran of the diaspora, he stands as a highly respected and seasoned journalist, shaping the voice of the Tamil community for over 20 years.