Posted in

அடுத்த வீட்டையும் காலி செய்யுங்கள்: மகிந்தவை ஓட ஓட விரட்டும் அனுராவின் அதிரடி !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் கோரிக்கை… சட்ட மூலம் தயாராகி வருகிறது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கான சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராகி வருகிறது என பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர், சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார்.

“30,000 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த உத்தியோகபூர்வ இல்லத்தில் ஐந்து ஆண்டுகளாக தங்கியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி அவர்களே, உங்களுக்கு மனசாட்சி இருந்தால் இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். இல்லையென்றால், சில நாட்களில் இதற்கான சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்போம். அதன்படி சட்டரீதியாக வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும். இப்போதே சென்று விட்டால், அது கௌரவமாக இருக்கும். இனி அவரே முடிவு செய்ய வேண்டும்,” என்று சுனில் வட்டகல தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதுவரை எந்த பதிலும் வழங்கவில்லை. இந்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால், அது எப்படியான சட்டரீதியான முடிவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்து அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை, முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் பாதுகாப்புகள் குறித்து புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. இந்த விவகாரம் எவ்வாறு முன்னேறும் என்பது குறித்து அனைவரும் கண்காணித்து வருகின்றனர்.

சரன் கடந்த 12 வருடங்களாக அதிர்வு இணைய ஆசிரியராக கடமையாற்றி வருகிறார். ஒரு மூத்த பத்திரிகையாளர்.