Posted in

என்னோடு உல்லாசமாக இருந்தால் பட வாய்ப்பு என்கிறார்கள் இயக்குனர்கள்: தங்கல் பட நாயகி !

பாலிவுட் நடிகை பாத்திமா சனா ஷேக்கின் அதிரடி பேட்டி: தென்னிந்தியாவில் காஸ்டிங் கோச் அனுபவத்தை பகிர்ந்தார்!

பாலிவுட்டின் பிரபல நடிகை பாத்திமா சனா ஷேக், தங்கள் படத்தில் அமீர்கானின் மகளாக நடித்ததன் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவர். இவர் குழந்தை நட்சத்திரமாக கமல்ஹாசன் நடித்த சாச்சி 420 படத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் தென்னிந்திய சினிமாவில் ஒரே ஒரு தெலுங்கு படத்தில் மட்டுமே நடித்துள்ளார். அதுவும் 2015-இல் வெளியான ‘நின்னு நேனு ஒக்கட்டவுடம்’ என்ற படம். இதற்குப் பிறகு தென்னிந்தியாவில் எந்த படத்திலும் நடிக்காத இவர், சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது காஸ்டிங் கோச் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

பாத்திமா சனா ஷேக், தங்கள் படத்தில் கீதா போகத் என்ற ரியல் லைஃப் மல்யுத்த வீராங்கனையின் கதாபாத்திரத்தில் நடித்து மாஸ் காட்டினார். இந்த படம் இந்திய சினிமாவில் முதன்முறையாக 2000 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இதில் அமீர்கான் அப்பாவாக நடித்தார். அடுத்து, அமீர்கான் நடித்த தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் படத்திலும் பாத்திமா சனா ஷேக்குக்கு முக்கிய கதாபாத்திரம் வழங்கப்பட்டது.

இருப்பினும், தென்னிந்திய சினிமா துறையில் தனக்கு ஏற்பட்ட காஸ்டிங் கோச் அனுபவத்தை பாத்திமா சனா ஷேக் சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, ஹைதராபாத்தில் உள்ள சினிமா பிரபலங்கள் பற்றி அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைப்பதாக அவர் குறிப்பிட்டதும், இந்திய சினிமா உலகில் ஒரு பெரிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.

இந்த பேட்டியில் அவர் தென்னிந்திய சினிமாவில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். இதனால், சமூக ஊடகங்களில் இது குறித்து விவாதங்கள் மும்முரமாக உள்ளன. பாத்திமா சனா ஷேக்கின் இந்த பேட்டி, இந்திய சினிமா துறையில் உள்ள மறைக்கப்பட்ட பிரச்சினைகளை மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது.

சரன் கடந்த 12 வருடங்களாக அதிர்வு இணைய ஆசிரியராக கடமையாற்றி வருகிறார். ஒரு மூத்த பத்திரிகையாளர்.