Posted in

முன் நாள் ஜனாதிபதி கோட்டபாயவை CID அழைத்து விசாரணை ஒன்றரை மணி நேரம் கேள்வி

நேற்று முற்பகல் (17) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CஈD) ஆஜரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர்  அங்கிருந்து வெளியேறிடதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கதிர்காமம் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்திருந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி  காலை திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார்.

இதன்போது, சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சரன் கடந்த 12 வருடங்களாக அதிர்வு இணைய ஆசிரியராக கடமையாற்றி வருகிறார். ஒரு மூத்த பத்திரிகையாளர்.