Posted in

Breaking News: Hamas releases hostages பரபரப்புக்கு மத்தியில் 3 பெண்களை விடுதலை செய்த ஹமாஸ்

சற்று முன்னர் பெரும் பரபரப்புக்கு முன்னர் 3 பணயக் கைதிகளை ஹமாஸ் இயக்கம் விடுவித்துள்ளது. இவர்கள் மூவரும் சுமார் 470 நாட்கள் ஹமாஸ் பிடியில் சிறையில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் ஒரு பெண் பிரிட்டனைச் சேர்ந்தவர். குறித்த 3 பெண்களையும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், பொறுப்பெடுத்து , அவர்களை உரிய நாட்டுக்கு அனுப்பி வைக்க உள்ளது. 

எமிலி(28) பிரித்தானியாவைச் சேர்ந்தவர், றோமி(24) மற்றும் டோறோன்(31) என்ற 3 பெண்களை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. நூற்றுக்கும் அதிகமான ஹமாஸ் ஆயுததாரிகள், ஒரு இடத்தில் குவிந்து ஆர்பரித்தார்கள். இதில் பாலஸ்தீன மக்களும் இணைந்து கொண்டார்கள். பின்னர் அந்த இடத்திற்கு ஒரு வெள்ளை வேன் வந்து நின்றது. அதில் இருந்து 3 பெண் பணயக் கைதிகளை ஹமாஸ் அமைப்பு கீழே இறக்கியது.

பெரும் பதற்றமான சூழ் நிலை காணப்பட்டது. அங்கே வந்த Red-Cross  உறுப்பினர்கள் உடனடியாக அந்தப் பெண்களை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்கள். சில தினங்களுக்கு முன்ன, ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பாலஸ்தீன மக்கள் ஒரு வெற்றியாகப் பார்கிறார்கள்.  கீழே வீடியோ இணைப்பு.


 


சரன் கடந்த 12 வருடங்களாக அதிர்வு இணைய ஆசிரியராக கடமையாற்றி வருகிறார். ஒரு மூத்த பத்திரிகையாளர்.