Posted in

வழக்கு போட்ட பிள்ளையானுக்கே 50,000 ரூபா தண்டம் அறவிட்ட நீதிமன்றம்: சாணக்கியன் சாதூரியம் !

மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தன்னை அவமதிப்பாகக் கருதக்கூடிய வகையில் கருத்து வெளியிட்டதாக கூறி முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கல்கிசை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் ஒன்றை செய்துள்ளார்.

இவ்வழக்கு தொடர்பில், நேற்று (23) பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கல்கிசை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலையாகி, அவரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனும் ஆஜரானார்.

வழக்குத் தாக்கல் செய்த சிவநேசதுரை சந்திரகாந்தன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதன்போது, எதிர்மறை தரப்பின் சட்ட நுண்ணறிவாளர் சுமந்திரன், இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இந்த நீதிமன்றத்துக்கு உடைமையாக்கும் அதிகாரம் இல்லை என வாதத்தை முன்வைத்தார்.

வழக்கு விசாரணைக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் கோப்புக்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தால், வழக்குத் தாக்கல் செய்த சிவநேசதுரை சந்திரகாந்தன், வழக்கு செலவினமாக எதிர்த்தரப்புக்கு 50,000 ரூபாயினை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இவ்வழக்கின் அடுத்த வழக்கு விசாரணை ஏப்ரல் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சரன் கடந்த 12 வருடங்களாக அதிர்வு இணைய ஆசிரியராக கடமையாற்றி வருகிறார். ஒரு மூத்த பத்திரிகையாளர்.